சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகர் ராதாரவியின் சகோதரி மகன் ஐக், இயக்கி உள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. இதில் ராதாரவியும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் எம்.ஆர்.ராதா குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராதாரவி அவர்களை கலாயத்தார். அவர் பேசியது வருமாறு:
என் மகனை சினிமாவில் வரவைக்க ஆசைப்பட்டேன். சினிமாவில் நிறைய நன்றி கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தானோ என்னவோ அவனுக்கு சினிமா பிடிக்கவில்லை. அப்பா ஒரு துறையில் இருந்தால் மகனும் அதே துறைக்கு வருவது தான் இயல்பு. இந்தி படமாக இருந்தாலும் சரி, மொழியாக இருந்தாலும் சரி எனக்கு ஆகாது. ஆனாலும் இந்தி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரியதர்ஷனிடம் சகோதரி மகன் ஐக்கை சேர்த்து விட்டேன். பிறகு கமல்ஹாசனிடம் வேலை பார்த்தான். ஐக் கடுமையான உழைப்பாளி. இந்த படத்தை சிறப்பாக எடுத்துள்ளான்.
இங்கு எங்கள் குடும்பத்தினர் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். ஒரே திருட்டு முகமாக இருக்கிறது. நானும் ஒரு திருடன் தான். இந்தப் படம் கண்டிப்பாக ஹவுஸ்புல்லா ஓடும். தமிழ்நாடு முழுக்க அப்பா நடிகவேள் எம்.ஆர்.ராதா எங்கள் குடும்பத்துக்கு கிளைகளை திறந்து வைத்திருக்கிறார், அதனால் இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்றார் ராதாரவி.