ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என்பது லாரன்சின் சினிமா முகங்கள், ஆதரவு இல்லம் நடத்துகிறவர். ராகவேந்திராவுக்கு கோவில் கட்டி ஆன்மீக பணி செய்கிறவர். அம்மாவுக்கே கோவில் கட்டி வணங்குகிறவர். விவசாயிகள் பிரச்சினையா, ஜல்லிக்கட்டு பிரச்சினையா அனைத்துக்கும் முன் நிற்கிறவர் என்பது இன்னொரு முகம். தற்போது அவர் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அடுத்து சேவையை தொடங்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீனிவாசன், யத்ரி தம்பதிகளுக்கு லக்ஷன், லக்ஷிகா, லக்ஷயா, லக்ஷா என நான்கு பெண்குழந்தைகள். 3 வயதாகும் இந்த குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தவை. தற்போது பள்ளிக்கு செல்லும் வயதுக்கு வந்திருக்கிறார்கள். தனியார் நிறுவனம் ஒன்றில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஸ்ரீனிவாசனால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதுபற்றி தனது நண்பர்கள் மூலம் அறிந்த லாரன்ஸ் அவர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து குழந்தைகளை தான் தத்தெடுத்துக் கொள்வதாக கூறினார். குழந்தைகளின் படிப்பு செலவு, திருமண செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தான் ஏற்பதாக கூறினார். இதானல் அந்த தம்பதிகள் நெகிழ்ச்சியுடன் லாரன்சுக்கு நன்றி தெரிவித்தனர்.