ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் பாடகர் சோனு நிகாம், காலை நேர வழிபாட்டின் போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். சோனுவின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் சோனுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சோனுவின் கருத்திற்கு பாடலாசிரியர் ஜவேத் அக்தர் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில், 2017 ம் ஆண்டிற்கான தாதா சாகிப் பால்கே விருது வழங்கும் விழாவில் ஜவேத் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஜவேத்திற்கு சிறந்த பாடலாரிசிரியர், புலவர் மற்றும் கதையாசிரியர் விருது வழங்கப்பட்டது.
அப்போது சோனு விவகாரம் குறித்து ஜவேத்திடம் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த ஜவேத், அவர் கூறியதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் வழிபாடு நடத்துவது மசூதியாகவோ, சர்ச்சாகவோ, கோயிலாகவோ, குருத்வாராகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த வழிபாடு மற்றவர்களை தொந்தரவு செய்யும் வகையில் இருக்கக் கூடாது என தெரிவித்தார்.