ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கியவர் ரவி அரசு. அதையடுத்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இன்ஞ்சினியர் வேடத்தில் நடிக்கும் இந்த படம் நாமக்கல் கதைக்களத்தில் உருவாகிறது. அதன்காரணமாக முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தியவர்கள், இரண்டாம் கட்டபடப்பிடிப்பை கடந்த இரண்டு வாரங்களாக நாமக்கல்லில் முகாமிட்டு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் தான் யூனிட் சென்னை திரும்பியிருக்கிறது.
மேலும், இந்த படம் மெடிக்கல் திரில்லர் கதையில் உருவாகிறது. மெடிக்கல் துறையில் நடக்கும் சில அசம்பாவிதங்களை வெளிச்சம் போட்டு காட்டும் கதையாம். சமீபத்தில் ஈரம் அறிவழகன் இயக்கத்தில் வெளியான குற்றம் 23 படமும் மெடிக்கல் துறையில் நடக்கும் ஒரு திடுக் சம்பவங்களைதான் வெளிச்சம் போட்டது. அதேபோல் இந்த ஐங்கரன் படமும் இன்னொரு அதிர்ச்சி தரும் திடுக் சம்பவத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறதாம்.