ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஜான் ஆபிரஹாம், தமன்னா நடிப்பில் உருவாகும் படம் ‛சோர் நிகர் கே பாகா'. அமர் கவுசிக் இயக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. ஜான் ஆபிரஹாம் போலீசாகவும், தமன்னா விமனப் பணிப்பெண்ணாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ்வும் இணைந்துள்ளார். இதை அவரே உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி ராஜ்குமார் கூறியதாவது... ‛‛‛சோர் நிகர் கே பாகா' படத்தில் நான் நடிக்கிறேன். இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடம், நானும், ஜானும் சினிமா தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளோம். அவருடன் இணைந்து நடிக்கும் நாளை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
‛சோர் நிகர் கே பாகா' படத்தை ஜான் ஆபிரஹாம், அர்ஜூன் என் கபூர் மற்றும் ராஜ் குமார் குப்தா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.