14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பிரபல ஹிந்தி நடிகர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். சிறை சென்று திரும்பியிருக்கும் இவர், தற்போது இயக்குநர் ஓமங் குமார் இயக்கத்தில் ‛பூமி' படத்தில் நடித்து வருகிறார். அப்பா - மகளுக்கு இடையேயான பாச போராட்டத்தை மையமாக வைத்து ‛பூமி' படம் உருவாகி வருகிறது. இதில் அப்பா ரோலில் சஞ்சய் தத்தும், அவரது மகளாக அதிதி ராவ் ஹைதாரியும் நடிக்கிறார்கள். பூமி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டில்லியின் ஆக்ராவில் நடந்து வந்த நிலையில், அதை விரைவாக முடித்துவிட்டார்கள்.
இதுப்பற்றி தயாரிப்பாளர் பூஷண் குமார் கூறியதாவது.... "படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்தது. அந்த வேகத்திற்கு இணையாக சஞ்சய் தத்தும் சிறப்பாக நடித்தார், இப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது" என்றார்.