ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ரஜினிகாந்த், ஏப்ரல் 2-ம் தேதி தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக வந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். சமீபகாலமாக ரஜினியின் நடவடிக்கைகளில் நிறையவே மாற்றம் தெரிகிறது. இந்நிலையில், வருகிற 2ந் தேதி ரஜினி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பயணத்திற்காக தான் ரஜினி, ரசிகர்களை அழைத்துள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது. அதேசமயம், லதா ரஜினிகாந்த் சமூக சேவை தொடர்பாக ஒரு அமைப்பை தொடங்க உள்ளாராம். இதற்காக தான் ரசிகர்களை அழைத்து பேசப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ரஜினியை சுற்றி பல செய்திகள் சிரகடித்து பறந்து கொண்டிருக்கும் வேளையில் ரஜினி தரப்பு இதை மறுத்துள்ளது. ரஜினியின் செய்தி தொடர்பாளர் ரியாஸ், ‛‛ஏப்ரல் 2-ம் தேதி ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.