ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நடிகர் கமலஹாசன் மீது, கடந்த சில நாட்களாக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகி்ன்றன. இந்நிலையில் இன்று (மார்ச் 26) பெங்களூரு போலீஸ் ஸ்டேஷனில் கமல் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் டிவி ஒன்றிற்கு கமல் அளித்த பேட்டியின் போது, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை உதாரணம் காட்டி விளக்கமளித்தார். இதனால், இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை அவமதிக்கும் வகையில் கமல் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக கும்பகோணம் மற்றும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டுகளில் கமல் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பிரதானந்தா என்ற சாமியார் பெங்களூரு போலீஸ் ஸ்டேஷனில் இன்று புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு குறித்து கமலிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.