ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சச்சின் ஜோஷி. உலகம் முழுவதும் ஓட்டல் நடத்துகிறார். மதுபான தொழிற்சாலை நடத்துகிறார். வாழ்நாளில் பாதி நேரம் விமானத்தில் பறக்கும் கோடீஸ்வரர். ஆனாலும் அவருக்கும் சினிமா மீது ஆர்வம். தொழில் நேரம் போக மீதி நேரங்களில் சினிமாவில் நடிப்பது அவரது பொழுதுபோக்கு. ஆரம்பத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அதன் பிறகு பாலிவுட்டுக்குச் சென்றார். அங்கு 5 படங்களில் நடித்தார். இப்போது தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டு யார் இவன் என்ற படத்தை தயாரித்து அதில் நடித்துள்ளார்.
தமிழ் தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை டி.சத்யா இயக்குகிறார். சச்சின் ஜோடியாக பாலிவுட் நடிகை இஷா குப்தா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார், பிரபு, கிஷோர், சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளார். இது பாரா கபடி போட்டியை பின்னணியாக கொண்டு உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. இந்தப் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து தமிழில் படம் தயாரித்து நடிக்க இருக்கிறார் சச்சின்.