ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாடல் தொடங்கி, ஊதா கலரு ரிப்பன் உள்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருப்பவர் யுகபாரதி. சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான மாவீரன் கிட்டு படத்தில் வசனம் எழுதியிருந்தார். மேலும், சமீபகாலமாக டி.இமான் இசையில் அதிகப்படியான பாடல்களை எழுதி வருகிறார் யுகபாரதி. அப்படி அவர்கள் இணைந்து செயல்படும் படங்களின் பாடல்கள் ஹிட்டடித்து வருவதால், அவர்களை ராசியான கூட்டணி என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இதுபற்றி யுகபாரதி கூறும்போது, நான் எழுதும் ஒவ்வொரு பாடலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில்தான் பாடல்கள் எழுதி வருகிறேன். அதில் டி.இமான் இசையில் எழுதும் பாடல்கள் அதிகமாக ஹிட்டாகி வருவதால் எங்களை ராசியான கூட்டணி என்கிறார்கள். அப்படி சொல்வது மகிழ்ச்சியாகவே உள்ளது. தற்போது நான் டி.இமான் இசையில் மட்டும் 7 படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறேன். மொத்தம் 25 படங்களுக்கு பாடல் எழுதுகிறேன் என்கிறார்.
அவரிடத்தில், இளையராஜா கூறியுள்ள பாடல் காப்பி ரைட்ஸ் பற்றி கருத்து கேட்டபோது, இளையராஜா சொல்வது நியாயமானது. அதை நான் வரவேற்கிறேன் என்கிறார் யுகபாரதி.