ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி 2' படத்தின் டிரைலர் கடந்த வாரம் 16ம் தேதியன்று காலை வெளியானது. 24 மணி நேரத்தில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த டிரைலர் தொடர்ந்து பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. இப்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனைதான் அது. யு டியூபில் நான்கு மொழிகளில் வெளியான இப்படத்தின் டிரைலரை, தெலுங்கில் 5 லட்சத்து 94 ஆயிரம் பேரும், ஹிந்தியில் 3 லட்சத்து 61 ஆயிரம் பேரும், தமிழில் 86 ஆயிரம் பேரும், மலையாளத்தில் 16 ஆயிரம் பேரும் லைக் செய்துள்ளனர். மொத்தமாக 10 லட்சம் லைக்குகளை 'பாகுபலி 2' டிரைலர் கடந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் 'பாகுபலி 2' தெலுங்கு டிரைலரின் பார்வை 3 கோடியைத் தாண்டியுள்ளது. ஹிந்தி டிரைலரின் பார்வை 2 கோடியே 50 லட்சத்தையும், தமிழ் டிரைலரின் பார்வை 47 லட்சத்தையும், மலையாள டிரைலரின் பார்வை 9 லட்சத்தையும் தாண்டியுள்ளது. யு டியூபில் மட்டும் இந்த டிரைலரின் பார்வை எண்ணிக்கை 6 கோடியே 21 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஃபேஸ்புக் பார்வைகளின் எண்ணிக்கையைம் சேர்த்தால் 8 கோடியே 50 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். இந்த சாதனை 96 மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
'பாகுபலி 2' தெலுங்கு டிரைலருக்கு அதிகப் பார்வைகள் கிடைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், ஹிந்தி டிரைலருக்கும், தெலுங்கு டிரைலர் அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தின் வசூல் முதல் பாகத்தை விட அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.