அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
வேந்தர் தொலைக்காட்சியில் ஏழாம் உயிர் தொடரின் நாயகி லட்சுமி விஸ்வநாத். மலையாள தொடர்கள் மூலம் தமிழுக்கு வந்தவர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார். இடைவெளிக்கு பிறகு நடிக்க முடிவு செய்திருந்தவர் இப்போது அந்த முடிவை கைவிட்டுவிட்டு கல்லூரி மாணவியாகிவிட்டார்.
எர்ணாகுளம் மகளிர் கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ., ஆங்கில படிக்கிறார். எர்ணாகுளம் தான் லட்சுமியின் சொந்த ஊர். "திருமணத்திற்காக நடிப்புக்கு குட்பை சொன்னேன். நடிப்பை போலவே படிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்தபோது பெற்றோர்களும், கணவரும் எம்.ஏ. படிச்சு முடிச்சுடுன்னு சொன்னாங்க. அதனால் கல்லூரிக்கு கிளம்பி விட்டேன். மீண்டும் நடிப்பது குறித்து படிப்பு முடிந்ததும் தான் முடிவெடுக்க முடியும்" என்கிறார் லட்சுமி விஸ்வநாத்.