ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். நடிகையில் இருந்து தயாரிப்பாளராகவும், பாடகியாகவும் மாறி தனது திறமையை மேலும் வளர்த்து கொண்டே போகிறார். தற்போது, அவர் ‛பில்லாரி என்ற படத்தில் தில்ஜித் தோஸ்னாவுடன் நடித்துள்ளார். கூடவே ஒரு ராப் பாடலும் பாடியிருக்கிறார். இரண்டு வாரங்களில் படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக உள்ளார் அனுஷ்கா. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா, பேயாக நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்தார்.
அப்போது அவர் பேசுகையில், படத்தில் பேயாக நடித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பொதுவாக நடிகர்கள் உயிர் உள்ளவர் போன்று தான் அதிகம் நடிப்பர். ஆனால், இந்தப்படத்தில் உயிரில்லாமல் நடித்தது மிகவும் அருமையாகவும், ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. எப்பவும் வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்றவர், பேயயை ஆதரித்தும் பேசினார்.
‛பில்லாரி'படம் வருகிற மார்ச் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது.