ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. ஒருக்கட்டத்தில் படங்களின் வாய்ப்பு குறையவே இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2014-ம் ஆண்டு மார்தானி படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். இப்படம் வெற்றி பெற்றது. இதில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி நடித்திருந்தார். இந்நிலையில் ராணி முகர்ஜியின் அடுத்தப்படம் மார்தானி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது மார்தானியை தள்ளி வைத்துவிட்டு புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‛ஹிட்சிக்கி' என்று பெயர் வைத்துள்ளனர். சித்தார்த் மல்கோத்ரா இயக்க, யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இதுப்பற்றி சித்தார்த் மல்கோத்ராவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛யாஸ் பிலிம்ஸில் நான் படம் இயக்குகிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எதுவுமே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுப்பற்றி மேற்கொண்டு எதுவும் நான் பேச முடியாது. ராணி முகர்ஜியுடன் படம் பண்ண எனக்கு ஆசை, அவரை இயக்க வேண்டும் என்பது என் கனவு'' என்று கூறியுள்ளார்.