14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பிரபல மலையாள இயக்குனர் கமல் பாலிவுட் நடிகை வித்யாபாலனை வைத்து இயக்குவதற்காக தயாரான படம் தான் 'ஆமி'. இந்த 'ஆமி' படத்தின் கதையின் நாயகி தான் எழுத்தளார் கமலா சுரையா.. கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் கமலா தாஸ் ஆக பிறந்தவர்... மாதவிக்குட்டி என்கிற புனைப்பெயர் கொண்டவர்.. பிற்பாடு நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்தவர். ஒரு பெண் எழுத்தாளரின் சுயசரிதையில் நடிக்கப்போகிறோம் என்பதாலேயே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் வித்யாபாலன். அந்தப்படத்திற்காக தான் தயாராகி வருவதாகவும் அவரே அவ்வப்போது சோஷியல் மீடியாவில் தகவல்களை பதிவுசெய்தும் வந்தார்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இந்தப்படத்தில் இருந்து வித்யாபாலன் விலகிவிட்டார். இந்தப்படத்தின் கதை நாயகியான கமலா என்கிற மாதவிக்குட்டி பற்றிய வித்யாபாலனின் பல கேள்விகளுக்கு இயக்குனர் கமல் மற்றும் கதாசிரியர் டீம் சரியான பதிலை சொல்லவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த வித்யாபாலன் இந்தப்படத்தில் இருந்து வெளியேறினார் என்று அவரது தரப்பில் காரணம் சொல்லப்பட்டது அதன்பின் வித்யாவுக்கு பதிலாக மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துவிட்டார் இயக்குனர் கமல்..
ஆனால் 'ஆமி' படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வித்யாபாலன் இப்படி அதிரடியாக விலகியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லையாம். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் எல்லாம் வாங்கியபின் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகியுள்ள வேளையில் வித்யாபாலன் இப்படி திடீரென விலகியது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.. இதற்காக வித்யாபாலன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் செயல்களில் அவர்கள் இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வித்யாபாலன் இந்தப்படத்தில் இருந்து விலகியதுமே, அவர் சினிமாவுக்கென உள்ள நடைமுற விதிகள், தொழில் தர்மம் ஆகியவற்றை மீறி செயல்படுகிறார் என இயக்குனர் கமல் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.