ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமானவர் கிருத்திகா. அதையடுத்து செல்லமே, என் இனிய தோழியே, கேளடி கண்மணி, பாசமலர் என பல சீரியல்களில் நடித்தவர் தற்போது வம்சம் சீரியலில் நடித்து வருகிறார். மேலும், பெரும்பாலான டிவி நடிகைகளுக்கு அடுத்தபடியாக சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்கிற ஆசை இருந்து வரும் நிலையில், கிருத்திகாவோ தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லை என்கிறார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், சீரியல்களில் நான் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறேன். ஒரு சீரியலில் பாசிட்டிவான வேடம் என்றால், இன்னொரு சீரியலில் நெகடீவ் கலந்த வேடம். மற்றொரு சீரியலில் இல்லத்தரசி வேடம் என நடிக்கிறேன். அப்போது அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப முழுமையான நடிப்பை வெளிப்படுத்துகிறேன். இதனால் டிவி சீரியல் பார்க்கம் நேயர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது.
தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடிக்கிறேன். இந்த சீரியல் எனக்கு நல்ல ரீச் கொடுத்துள்ளது. இதில் பிசியாக இருப்பதால் வேறு சீரியல்களில் நடிக்க நேரம் இல்லை என்று கூறும் கிருத்திகாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் துளியும் இல்லையாம். காரணம், சீரியலிலேயே நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. அதோடு அலுவலகம் செல்வது போன்று காலையில் ஸ்பாட்டுக்கு சென்றால் மாலை வீடு திரும்பி விடலாம். அதனால் இதுவே எனக்கு போதுமானதாகவும், மனநிறைவாகவும் உள்ளது என்கிறார் கிருத்திகா.