ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டின் பிரபல நடிகரான அர்ஷத் வர்சி, தான் நடித்துள்ள இரடா படத்தை புரொமோஷன் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற புரொமோஷன் ஒன்றில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது நடந்த தாக்குதல் குறித்து மனம் திறந்தார்.
அவர் பேசுகையில், சினிமா துறையில் இருந்து அரசுக்கு அதிகப்படியான வரி போகிறது. ஆனால் எங்களைப்போன்ற சினிமாக்காரர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எப்போதுமே எங்களை குறிவைத்தே தாக்குதல் சம்பவம் நடக்கிறது. இதை யாரும் கண்டு கொள்வது கிடையாது. சஞ்சய் லீலா பன்சாலியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறான விஷயம், இதுபோன்று நடக்க கூடாது. இதுபோன்ற விஷயங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.