அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
எம்.ஜி.ஆர், ரஜினி நடித்த படங்களின் பாடல் வரிகள் சினிமா டைட்டிலாக இடம்பெற்று வருகிறது. அந்த வரிசையில் விக்ரம் நடித்த ஐ படத்தின் பாடல் வரியும் டைட்டில் ஆகியிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த என்னோடு நீ இருந்தால்... என்ற பாடல் வரி தலைப்பாகியிருக்கிறது.
சைட்டோ பிலிம் கார்பரேஷன் சார்பில் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்தை மு.ரா.சத்யா என்ற புதுமுகம் இயக்கி, நடிக்கிறார். மானசா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர வெண்ணிற ஆடை மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி ஆகியோரும் நடிக்கிறார்கள். நாக.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார், கே.கே இசை அமைக்கிறார்.
"இது ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கும் ஒரு கோடீஸ்வர பெண்ணுக்குமான காதல் கதை. இருவருக்கு பின்னாலும் சில தொழில் ரீதியான ஆபத்துக்கள் உள்ளது. ஒரு நாள் ஹீரோயின் காணாமல் போகிறார். தேடிச் செல்லும் ஹீரோவுக்கு பல அதிர்ச்சிகளை சந்திக்கிறார். அது என்ன என்பதை சொல்லும் படம். ரொமாண்ட்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது" என்கிறார் மு.ரா.சத்யா.