ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் 4 நாட்களுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நடிகர் லாரன்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி மெரினா கடற்கரையில் 4 நாட்களாக லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பெண்களும் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். நடிகர் லாரன்ஸ் போராட்டத்தின் முதல் நாளே மெரினாவிற்கு வந்து ஆதரவு தெரிவித்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களுக்காக உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும், டாய்லெட் வசதி உள்ள 5 கேரவன்களை மெரினாவிற்கு கொண்டு வர உதவி செய்தார். இது, போராட்டத்தில் உள்ள பெண்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
நடிகர் லாரன்சுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கழுத்தில் பேன்ட் அணிந்து தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், 4 வது நாளான இன்று காலை 11.30 மணியளவில் திடீரென லாரன்ஸ் மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.