ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் 'சிங்கம்-3'. எஸ்-3 என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்படத்துக்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அங்கே எந்த கெடுபிடியும் செய்யாமல் யு சான்றிதழ் வழங்கினர். யு சான்றிதழ் கிடைத்ததால் வரிவிலக்கு நிச்சயம் கிடைக்கும். அதற்கு எஸ் 3 என்ற ஆங்கிலப்பெயர் தடையாக இருந்தது. எனவே சில தினங்களுக்கு முன் 'சி-3' என்று மாற்றப்பட்டது.
சி -3 படம் வருகிற 26-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. பைரவா படத்தைப்போலவே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் இந்தப்படம் தமிழகத்தில் வெளியாகும் அன்றே கேரளாவிலும் வெளியாகிறது. இதற்கு முன் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்', 'சிங்கம்-2' ஆகிய படங்கள் கேரளாவிலும் வெளியாகி நல்ல வசூலை குவித்துள்ளது. இதனால் கேரள ரசிகர்கள் மத்தியில் 'சி-3' படத்துக்கு எதிர்பார்ப்பு பல மடங்காக இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்ட சூர்யா 'சி3' பட புரொமோஷனுக்காக, இயக்குனர் ஹரியுடன் இணைந்து கேரளாவில் உள்ள திருச்சூரில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தும் சி3 படத்துக்கு புரமோஷன் செய்தார்.
இத்தனை செய்தும் ஜனவரி 26 அன்று படத்தை வெளியிடலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் சூர்யா. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் படத்தை வெளியிட வேண்டாம் என்கிறாராம். ஆனால் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட்டே தீர வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...?