ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகம் தாண்டி, கடல் கடந்து உலகம் முழுக்க வலுப்பெற்று வருகிறது. திரையுலகினர் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். நடிகர் ஜெயம் ரவி, தனது பட ஷூட்டிங்கிற்காக வெளியூரில் இருப்பதால் அவர் போரட்டத்தில் பங்கேற்கவில்லை, ஆகையால் ஒரு வீடியோவாக பதவிட்டு ஜல்லிக்கட்டு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் அனைத்து தமிழர்களுக்கும் என் நன்றி வணக்கம். நானும் ஆதரவாய் இருக்கிறேன் என்று சொல்லவே தேவையில்லை ஏனெ்னறால் நானும் தமிழன் தான். தற்போது தலக்கோணம் காட்டு பகுதியில் படப்பிடிப்பில் உள்ளேன், சென்னை வந்தவுடன் நானும் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். நிறைய அநியாயங்கள் நடக்கிறது அதையெல்லாம் ஏன் பீட்டா தடை செய்யவில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் குதிரை பந்தயத்தில் எவ்வளவு விஷயங்கள் நடக்கிறது, அது எப்படி வதைபடுகிறது, அதைப்பற்றி ஏன் பீட்டா பேசவில்லை. பணம் விளையாடுவதால் தான் இந்த பீட்டா பேசவில்லையா என்று தோன்றுகிறது. இது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த விஷயம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வன்முறையான போராட்டம் கிடையாது, அரசியல் சார்ந்த போராட்டமும் இல்லை, கூடிய விரைவில் ஒரு நல்ல தகவல் கிடைக்கும் என்று நம்புகிறோம், விரைவில் நானும் உங்களுடன் கலந்து கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயம் ரவி கூறியுள்ளார்.