ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் நாளை கடையடைப்பு, லாரிகள், பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என வேறு ஒரு தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தை இந்தியா மட்டுமல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகினரும் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இசைப்புயல் ரஹ்மானும் ஜல்லிக்கட்டுக்காக நாளை களம் இறங்க உள்ளார்.
இதுதொடர்பாக ரஹ்மான் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை நான் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுபோன்று ஒரு பேராட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபடுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.