ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும் வரை நமது போராட்டத்தை நிறுத்தக்கூடாது என, திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களிடையே நடிகர் விஜய்சேதுபதி பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி திண்டுக்கல்லில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் பகுதியில் கருப்பன் பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய் சேதுபதியும் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக சங்ககாலத்திலேயே அடையாளம் காட்டப்பட்டது ஜல்லிக்கட்டு. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் பொங்கல் விழா களை கட்டவில்லை. இந்த தடை ஒரு இனத்திற்கே செய்யும் துரோகமாகும். தற்போது மாணவர்கள் ஒன்றிணைந்து பாரம்பரியத்தை காக்க போராடுவது பாராட்டுக்குரியது. ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்கும்வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. உங்கள் போராட்டத்திற்கு நான் எப்போதும் துணை இருப்பேன், என்றார்.
செல்பியால் தள்ளுமுள்ளு: நடிகர் விஜய் சேதுபதி கூட்டத்திற்கு வந்தவுடன் கூச்சல், குழப்பத்துடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அவர், 30 நிமிடங்களாவது பேச வேண்டும் என்று வந்தார். கூச்சல், தள்ளுமுள்ளுவாலும், அவருடன் செல்பி எடுக்க சிலர் முற்பட்டபோது அவர் நெருக்கடியில் சிக்கியதாலும் ஐந்தே நிமிடங்களில் பேச்சை முடித்து வெளியேறினார்.