ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தன்மை என்ன என்று தெரியாமல் அறிக்கை மட்டும் விடுத்தால் போதும் என நினைத்து நேற்றுமுன்தினம் காலை போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டார் சூர்யா. ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டுவிட்டு மறுபக்கம் அடுத்த வாரம் வெளிவர உள்ள தன்னுடைய 'சி 3' படத்தினை விளம்பரப்படுத்த ஊர் ஊராகச் செல்லும் திட்டம் ஒன்றைத் தயாரித்தார். அதன்படி நேற்றுமுன்தினம் காலை கோயம்புத்தூரில் உள்ள தியேட்டர்களில் தன்னுடைய 'சி 3' படம் பற்றி பேசிவிட்டு, போகிற போக்கில் கூடவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பேசினார்.
இது பற்றிய செய்தி ஒன்றை நாமும் நேற்று காலை வெளியிட்டிருந்தோம். மக்களின் போராட்டத்திற்கு கூடும் கூட்டம் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தியேட்டர்கள் பக்கம் தன்னைப் பார்க்க ரசிகர்களை அவர் கூட்டுவது சரியல்ல என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
தொடர்ந்து சூர்யா மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார். மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், 'சி 3' படத்திற்காக செல்வது சரியாக இருக்காது என்பதை தாமதமாக உணர்ந்த சூர்யா, ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டார்.
சி 3 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரை, திருநெல்வேலிக்கான 'சி 3' பிரமோஷன் சுற்றுப் பயணத்தை ரத்து செய்கிறோம் என அறிவித்துள்ளார்கள்.