ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட்டில் கிடைத்த வரவேற்பை போல், தனக்கும் கிடைக்க வேண்டும் என, மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று, மனம் உருக பிரார்த்தனை நடத்தியுள்ளார் தீபிகா படுகோனே. இவர் நடித்த, டிரிபிள் எக்ஸ் ஹாலிவுட் படம், அமெரிக்காவில் நாளை திரைக்கு வருகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன் தான், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார் தீபிகா. இதற்கு பின் தான், அமெரிக்காவுக்கு சென்று, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றாராம். இது குறித்து தீபிகாவிடம் கேட்டால், 'எந்த ஒரு முக்கியமான நிகழ்வுக்கு முன்னும், சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதைப் பின்பற்றித் தான், ஹாலிவுட்டில் என் முதல் படம் ரிலீசாவதற்கு முன், கோவிலுக்கு சென்றேன்; இதில் புதிதாக எதுவும் இல்லை' என்கிறார்.