ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மான் வேட்டையாடியது தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சல்மான்கானும் சர்ச்சையும் பிரிக்கமுடியாத விஷயம். 19 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள கன்கானி கிராமத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றவர், துப்பாக்கி எடுத்துக் கொண்டு காட்டுக்குள் வேட்டையாட சென்றார். அப்போது இரண்டு மான்களை சுட்டு அதனை எடுத்து வந்தார். அவர் சுட்டது உலக வனயியல் கோட்பாட்டின்படி அரிய வகை மான் இனம். இதனால் வன இலாகாவினர் சல்மான்கான் மீது வழக்கு தொடர்ந்தனர்.
ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு 19 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்தவாரம் இறுதிகட்டத்தை எட்டிய வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை 18ந் தேதி வழங்குவதாக தெரிவித்திருந்தார். அதோடு தீர்ப்பு வழங்கப்படும் அன்று சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, சல்மான்கான் மீதான வழக்கு இன்று நடந்தது. சல்மான் நேரில் ஆஜரானார். வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் சல்மான் கானை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக கோர்ட் உத்தரவிட்டது. இதன்மூலம் கடந்த 19 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது, இதன்மூலம் சல்மானுக்கும் ஒரு பெரிய விடுதலை கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே சல்மான் கான், குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கிலும் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.