ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முறைமாமன் படத்தில் தொடங்கி, அரண்மனை இரண்டாம் பாகம் வரை 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கிரி அவற்றில் சில வெற்றிப்படங்கள்.
இயக்குனராக இருந்தவர் தலைநகரம் படத்தின் மூலம் நடிகரானார். வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், முரட்டுகாளை அரண்மனை உள்பட 15 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தற்போது சங்கமித்ரா என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை 3 மொழிகளில் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.
இதற்கிடையில் அவர் சின்னத்திரை சீரியல் இயக்குனராகியிருக்கிறார். அவரது முதல் படைப்பு நந்தினி. அரண்மனை படத்தின் சாயலில் தயாராகும் பேண்டசி தொடர். வருகிற 22ந் தேதி முதல் ஒளிப்பாகிறது. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை தயாரிப்பது குஷ்ப சுந்தரின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம்.