ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழகத்திற்கு பொங்கல் பரிசாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என, நடிகர் சங்கம் கூறியுள்ளது.
நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களுக்கும், ஒவ்வொரு கலாசார அடையாளம் உள்ளது. அவை அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில், நடிகர் சங்கம் முழுமையாக நம்புகிறது. ஏறு தழுவுதல் என்கிற ஜல்லிக்கட்டு, தமிழர்களின் தொன்மை அடையாளமாக உள்ளது. சட்டத்தின் முன், ஜல்லிக்கட்டு பற்றி வேறு பார்வை இருக்கிறது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், இதை சட்டத்திற்கு புரிய வைத்து, நம் மொழிசார்ந்த கலாசாரங்களை வாழ வைப்பது கடமை. தனிப்பட்ட கருத்தை பதிவு செய்ய, அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில், தன் கருத்தை பதிவு செய்த நடிகையிடம், சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்தத்தக்கது. ஜல்லிக்கட்டு விஷயத்தில், எல்லை மீறல் நடப்பதற்கு முன், மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியாவது, இந்தாண்டு ஏறு தழுவுதலை நடத்தித் தர வேண்டும் என, நாங்கள் வேண்டுகிறோம். இதுவே, தமிழக மக்களுக்கு தரும் பொங்கல் பரிசாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.