ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் வளர்ந்து வரும் முன்னணி இளம் ஹீரோ ஆதித்யா ராய் கபூர். பிட்டூர் படத்தின் தோல்விக்கு பிறகு மணிரத்னத்தின் ‛ஓ காதல் கண்மணி' படத்தின் ரீ-மேக்கான ‛ஓகே ஜானு' படத்தின் மூலம் வருகிறார். ஆதித்யா ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். ஜன., 13-ம் தேதி ஓகே ஜானு ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஆதித்யா ராய் கபூர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...
லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி உங்கள் கருத்து என்ன.?
இது சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனால் இன்றைக்கு இந்த வாழ்க்கை முறை சர்வசாதாரணமாகிவிட்டது. அதனால் இதுதொடர்பான படங்கள் அதிகளவில் வெளிவருகின்றன. என் நண்பர்கள் சிலர் கூட லிவ் இன் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை வாழ்கிறார்கள். சிலருக்கு அது ஒர்க்-அவுட் ஆகும், சிலருக்கு அது ஒர்க்-அவுட் ஆகாது. என்னை பொறுத்தமட்டில் அது தவறுவும் கிடையாது, மோசமான விஷயமும் அல்ல. ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள லிவ் இன் முறைப்படி சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை.
ஓகே ஜானு படம் லிவ் லிலேஷன்ஷிப் பற்றி தான் சொல்ல வருகிறதா...?
ஓகே ஜானு லிவ் இன் முறை பற்றி மட்டும் அல்ல, நல்ல காதல் கதையும் கூட. ஒரு காதல் ஜோடிக்கு இடையேயான காதல் உறவை அழகாக சொல்ல உள்ளோம். இது தவறு, இது சரி என்று நாங்கள் யாருக்கும் பாடம் எடுக்கவில்லை.
உங்களுக்கு இந்த பட வாய்ப்பு எப்படி கிடைத்தது.?, ஒரிஜினல் படத்தை பார்த்திருக்கிறீர்களா...?
ஓ காதல் கண்மணி படத்தை பார்த்துள்ளேன், அருமையான படம். ஒருநாள் இயக்குநர் ஷாத் அலியிடமிருந்து அழைப்பு வந்தது. உன்னோடு சேர்ந்து நான் ஒரு படம் பார்க்க வேண்டும் என்று கூறினார். அதன்படி ஓ காதல் கண்மணி படத்தை பார்த்தோம். அப்போது இந்தப்படத்தின் கதையை தான் ரீ-மேக் செய்ய இருப்பதாகவும், அதற்கான கதையை எழுதி வருவதாகவும், அதில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறினார். நானும் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன், ஏனென்றால் இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஸ்ரத்தாவுடன் நீங்கள் ஏற்கனவே நடித்திருக்கிறீர்கள், அவருக்கு ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்.?
கடுமையாக உழைக்க கூடியவர் ஸ்ரத்தா கபூர். நிறைய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று எப்போதும் ஆர்வமாய் இருப்பார். இன்றைக்கு இயக்குநர்களின் ஹீரோயினாக அவர் மாறியிருக்கிறார், பிஸியான நடிகையாகவும் வலம் வருகிறார். எதை செய்தாலும் கொஞ்சம் மெதுவாக செய்பவர் ஸ்ரத்தா, அதை கொஞ்சம் மாற்றினால் நல்லது.
சென்ற ஆண்டு ஒரு படம் தான் ரிலீஸானது, ஏதேனும் காரணம் உள்ளதா.?
படங்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் மெதுவாக தான் தேர்வு செய்கிறன். வெறு பணத்திற்காக மட்டும் நடிக்கவில்லை. ஒரு படம் சரியாக இருந்தால் மட்டுமே நடிக்கிறேன். இனி இரண்டு மூன்று படங்களில் நடிப்பேன்.
யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உங்களுக்கு ஆசை.?
எனக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். யாராவது கிரிக்கெட் வீரர்கள் பற்றி படம் எடுத்தால் அதில் நடிக்க ஆர்வமாய் உள்ளேன். அதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை. ஏனென்றால், அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர், நானும் இடதுகை பந்து வீச்சாளர், அவருடைய கேரக்டரில் என்னால் சுலபமாக நடிக்க முடியும்.
இவ்வாறு ஆதித்யா ராய் கபூர் கூறியுள்ளார்.