ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 5 ஆண்டுகளாக முன்னணி தொலைக்காட்சிகள் பலவற்றிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் திவ்யா. தொகுப்பாளினி வேலை போரடித்துவிட்டதோ என்னவோ செய்தி வாசிப்பாளராகிவிட்டார். அடுத்த கட்டமாக சினிமாவிலும் நடிக்க இருக்கிறார்.
"செய்தி வாசிப்பாளரானாலும் இடையிடையே சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரே மாதிரியான வாழ்க்கை போரடித்துவிட்டது. அதனால்தான் சின்ன மாற்றம் செய்து கொண்டிருக்கிறேன்.
இனி சின்னத்திரை தொடர்களிலும், சினிமாவிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இதற்காக நல்ல வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நடிக்கும் சீரியல் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். சினிமாவில் தொகுப்பாளினி சினிமாவிலும் தொகுப்பாளினியாகவோ அல்லது டி.வி.நிருபராகவோத்தான் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. தொகுப்பாளினியாக இருந்தாலும் நடிகை என்றான பிறகு எல்லா கேரக்டரிலும் நடிக்க முடியும் தானே. அதனால் அதற்கேற்ற வாய்ப்புகளை தேடி வருகிறேன்" என்கிறார் திவ்யா.