வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
இந்தி மற்றும் பெங்காலி படங்களில் இரண்டாவது ஹீரோயினாகவும், குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து வருகிறவர் தினா தத்தா. சமீபத்தில் வித்யா பாலன் நடித்த பிரனீதா, ஐஸ்வர்யராய் நடித்த ஜோக்கர் பாலி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தினா நேற்று முன்தினம் மும்பையில் இருந்து இருந்து கல்கத்தாவிற்கு விமானத்தில் சென்றிருக்கிறார். அப்போது பின் சீட்டில் இருந்த ராஜேஷ் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து தினா கூறியிருப்பதாவது:
விமான பயணம் கூட பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு பின்புறம் அமர்ந்திருந்தவர் முன்பக்கம் கையை நீட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தார். ஆரம்பதில் நான் தெரியாமல் கைபட்டுவிட்டதாக நினைத்து திரும்பி பார்த்து அவரை முறைத்தேன். அவர் சாரி கேட்டார். ஆனால் அதன்பிறகும் தொடர்ந்து அவ்வாறே செய்தார். இதுகுறித்து பணிப்பெண்களிடம் புகார் செய்தேன். தவறுதலாக கை படுவது சகஜம்தான். வேண்டுமானால் சீட் மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள் என்றனர்.
நான் அந்த நபரை விமானத்தை விட்டு இறக்குங்கள் என்றேன். அதற்கு விமான பணிப்பெண்கள். நீங்கள் முறைப்படி புகார் அளித்தால்தான் அப்படிச் செய்ய முடியும் என்றார்கள். நானும் புகார் கொடுத்துவிட்டு வந்தேன். எனக்கு இந்த பிரச்சினை நடந்தபோது ஒரே ஒரு குடும்பத்தை தவிர வேறு யாரும் அதனை தடடிக் கேட்கவில்லை. விமான பணிப்பெண்கள் கூட எனக்கு உதவில்லை. என்றார். தினாவின் புகார் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.