ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மருமகள், ஜனனி, கல்கி, ருத்ரா என நெடுந்தொடர்களில் நடித்தவர் குஷ்பு. அதேபோல், கோடீஸ்வரி, ஜாக்பாட் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சில ஷோக்களும் நடத்தி வருகிறார். அந்த வகையில, சிம்ப்ளி குஷ்பு உள்பட சில நிகழ்ச்சிகளில் பிரபலங்களை சந்தித்து பேட்டி கண்டவர், தற்போது நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தற்போது நந்தினி என்றொரு மெகா தொடரை தயாரித்து வருகிறார் குஷ்பு. இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சீரியல் ஒன்று நான்கு மொழிகளில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார்கள். மேலும், தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்படும் இந்த தொடரை, தெலுங்கு, மலையாளத்தில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
அது மட்டுமின்றி சமீபகாலமாக சினிமாவுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி நேயர்களை கவர்ந்து வருகிறது. அதனால் குஷ்புவும் தனது நந்தினி தொடரை இந்தி தொடர்களுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்தி சீரியல்களுக்கு இணையாக தமிழ் சீரியல்களை பிரமாண்டமாக தயாரிக்க யாரும் முயற்சிக்காத நிலையில், முதன்முறையாக குஷ்பு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்.