ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒரு வடக்கன் செல்பி மலையாள படத்தில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமாமோகன். அப்போது சிம்புவைக்கொண்டு தான் இயக்கயிருந்த அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஹீரோயின் தேடி வந்த கெளதம்மேனன், மஞ்சிமாவின் நடிப்பை அந்த படத்தில் பார்த்து விட்டு தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். சிம்புவுடன் நடிக்க முன்னணி நடிகைகளே தயங்கி நின்ற நிலையில், தைரியமாக அவருடன் நடித்த மஞ்சிமாமோகன், பின்னர், சிம்பு வெரி நைஸ், நான் அவருடன் நடிக்க கமிட்டானபோது பலரும் பலவிதமாக சொன்னார்கள். ஆனால் அவர் அப்படியெல்லாம் இல்லை. ரொம்ப இனிமையானவர் என்று சொன்னார்.
மேலும், அந்த படம் இறுதிகட்டத்தை நெருங்கியபோது பேசினபடி தனக்கு சம்பளம் தராததால் பின்னர் படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுத்தார் சிம்பு. இதனால் படம் முடிந்தும் முடியாமலும் நின்று கொண்டிருந்தது. அதனால் காரணமாக அந்த படத்தை அப்படியே போட்டுவிட்டு தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடங்கிவிட்டார் கெளதம்மேனன்.
இதனால் தான் தமிழில் நடித்த முதல் படமே இப்படியாகி விட்டதே என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த மஞ்சிமாமோகனுக்கு விக்ரம் பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க உடனே அந்த படத்தில் கமிட்டாகி நடித்தார். ஆக, விக்ரம்பிரபு படம்தான் முதலில் ரிலீசாகும் நிலை இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு பின்னர் நடந்தது. படமும் வெளியாகி வெற்றி பெற்றதால் இப்போது வெற்றிப்பட நாயகியாகி விட்டார் மஞ்சிமா மோகன்.
இந்த நிலையில், சிகரம் தொடு இயக்குனர் கெளரவ், உதயநிதியை வைத்து இயக்கும் படத்தில் அடுத்து கமிட்டாகியிருக்கும் மஞ்சிமா, வாலு பட டைரக்டர் விஜயசந்தர், விக்ரமை நாயகனாக வைத்து இயக்கும் படத்திலும் இப்போது கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, மஞ்சிமாமோகன் ஆகிய மூன்று பேரின் பெயர்களும் பட்டியலில் இருந்த நிலையில், இப்போது மஞ்சிமா மோகன்தான் நடிக்கயிருப்பதாக சொல்கிறார்கள். வட சென்னை கதையில் உருவாகும் இந்த படத்தில் மஞ்சிமா மோகனுக்கு பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய அழுத்தமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.