விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இந்தியில் சமீபத்தில் வெளியான ஏ தில் ஹே முஷ்கில் என்ற படத்தில் ரன்பீர் கபூருடன் அதிக நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவர் அப்படி நடித்தது பிடிக்காமல் அபிஷேக்பச்சனின் குடும்பத்தினர் ஐஸ்வர்யாராய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், அந்த சம்பவத்தை அடுத்து ஐஸ்வர்யாராய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பாலிவுட்டில் வெளியாகி வரும் சில இணையதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவியுள்ளது. ஆனால் இதை ஐஸ்வர்யாராய்தரப்பு பகீரங்கமாக மறுத்துள்ளது.
இதையடுத்து இப்படியொரு செய்தியை பரப்பி விட்டது யார்? என்று அவர்கள் தீவிரமாக விசாரித்தபோது, அது பாகிஸ்தானைச்சேர்ந்த ஒரு இணையதளம் என்று தெரியவந்துள்ளது. இந்திய சினிமா பிரபலங்களை டார்க்கெட் பண்ணி இதுபோன்ற உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை அந்த இணையதளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறதாம். இதற்கு முன்பு அமிதாப்பச்சன், பாடகி லதா மங்கேஷ்கர், கேத்ரினா கைப், திலீப்குமார் உள்பட பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இதே இணையதளம்தான் செய்தி வெளியிட்டதாக தெரியவந்துள்ளது.