பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராகவ். அவர் இப்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதாவது தொடர்ந்து 100 நாட்களுக்கு கைத்தறி புடவைகள் அணிந்து அதனை செல்பி எடுத்து தனது பேஸ்புக் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். இதற்கு 100 டேய்ஸ் சாரீஸ் என்று தலைப்பும் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராகவின் இந்த சேலை அணிவகுப்பு லைக்குகளை குவித்து வருகிறது.
"இப்போதெல்லாம் சேலை அணிவது குறைந்து வருகிறது. குடும்ப விழாக்களில் மட்டுமே சேலை அணிகிறார்கள். எல்லா நேரத்திலும் சேலை அணியவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சியில் இறங்கினேன். நம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு சிறிய முயற்சி இது. இதை நான்தான் கண்டுபிடித்தேன் என்ற சொல்ல மாட்டேன், சில பெண்கள் பேஸ்புக்கில் இதற்கென தனி பக்கத்தையே உருவாக்கி படங்களை பதிவிட்டு வருகிறார்கள். நான் 100 நாள் 100 சேலை அணிகிறேன். இதற்கு 100 சேலை தேவையில்லை. ஒரே சேலையை இரண்டு விதமாக அணியலாம்" என்கிறார் ஐஸ்வர்யாராகவ்.