ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் மன்சூரலிகான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் செல்லாத என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் அதைப் பற்றி பணக்காரர்கள் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அப்பாவி மக்கள்தான் வங்கி வாசலில் வரிசையில் நிற்கிறார்கள். இந்த அறிவிப்பால் சினிமா தொழில் முடங்கி கிடக்கிறது. தியேட்டரில் வசூல் குறைந்து விட்டது, இதைப் பற்றி பேச சினிமாகார்களுக்கு தைரியம் இல்லை.
அதனால் நான் சொல்கிறேன். செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகள் பெட்ரோல் பங்கில், மெடிக்கல் ஸ்டோரில், அரசு அலுவகத்தில் செல்லும் என்பதை போல தியேட்டடர்களிலும் பழைய நோட்டுகளை கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தால்தான் சினிமா காப்பாற்றப்படும். பணத் தட்டுபாடால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அவர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். இதனை சினிமா சங்கங்கள் மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். இந்த அறிவிப்பால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னிடம் கருப்பு பணமும் இல்லை. கணக்கை பக்காவாக வைத்திருக்கிறேன். என்றார் மன்சூரலிகான்.