ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அடையாறு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் ஒளிப்பதிவாளருக்கு படித்து விட்டு ராஜீவ் மேனின் உதவியாளராக இருந்த நரேன், நிழல்கூத்து என்ற மலையாளப் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதிலிருந்து நடிப்பு ஆர்வம் அதிகமாக 4 தி பீப்பிள், பை த பீப்பிள், கிளாஸ் மேட் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். சித்திரம் பேசுதடி தமிழ் படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பிறகு அஞ்சாதே படம் அவரை பிரபலமாக்கியது.
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்க வேண்டியவர் திடீரென்று ஆக்ஷன் ஹீரோவாக முடிவு செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும்வரையில் ஆக்ஷன் ஹீரோவானார். அதன்பிறகு பள்ளிக்கூடம், தம்பிக்கோட்டை, படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு உதவவில்லை. முகமூடி படத்தில் வில்லனாக நடித்தார் அதுவும் ஓடவில்லை. அதன் பிறகு மலையாளப் படங்களில் நடிக்கச் சென்று விட்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு கத்துக்குட்டி படத்தில் நடித்தார். அது ஒரளவுக்கு அவருக்கு ஒரு ரீ எண்ட்ரியை கொடுத்தது.
தற்போது ரம் படத்தில் நடித்து வருகிறார். இதில் நரேன் ஹீரோ இல்லை. அனிருத்தின் கசின் பிரதர் ரிஷிகேஸ்தான் ஹீரோ, நரேன் இரண்டாவது ஹீரோ. மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்திருக்கிறார் நரேன். ரம் படத்திலிருந்து தனது புதிய பயணத்தை தொடங்குவாரா? ரம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.