ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தணிக்கை செய்யப்பட்டும் 400 படங்கள் வெளிவரமுடியாமல் முடங்கிக் கிடக்கின்றன என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார். அவரது மகன் லுத்புதீன் ஹீரோவா நடித்துள்ள பறந்து செல்லவா படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழாவில் நாசர் பேசியதாவது:
கலைத்துறையில் கால் நூற்றாண்டை கடந்தவன் நான். திரைத்துறை எப்படி வளர்ந்தது, எப்படி பாதிக்கப்பட்டது. இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற அனைத்தும் எனக்கும் தெரியும். அந்த வகையில் ஒரு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் 4 படங்களை தயாரித்தவன். அதில் நிறைய இழந்தவன். இப்போது படம் எடுப்பது சிரமமே இல்லை 10 லட்சத்திலும் படம் எடுக்கலாம், 100 கோடியிலும் படம் எடுக்கலாம். ஆனால் அதை வெளியிடுவதுதான் இன்றைக்குள்ள பெரும் பிரச்சினை. எனக்குத் தெரிந்து சமீப காலங்களில் தயாராகி, தணிக்கை செய்யப்பட்ட சுமார் 400 படங்கள் வெளிவரமுடியால் முடங்கிக் கிடக்கிறது. சிறிய படங்களுக்கு தாணு போன்ற தயாரிப்பாளர்களை கை கொடுப்பதுதான் இன்றைக்கு இருக்கிற ஒரே ஆறுதலான விஷயம். என்றார் நாசர்.