மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஜீ தமிழ் சேனலில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் லட்சுமிராமகிருஷ்ணன், பிரச்சினையுடன் வரும் தம்பதிகளின் பிரச்சினை களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது இன்னும் சில சேனல்களிலும் அதேபோன்ற நிகழ்ச்சிகளை வெவ்வேறு மாஜி நடிகைகளை வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீதிமன்றம் இருக்கும்போது எதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை டி.வியில் நடத்த வேண்டும் என்று ஸ்ரீபிரியா, ராதிகா, ரஞ்சனி போன்ற மாஜி நடிகைகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஸ்ரீபிரியா, பணத்திற்காக சமூக சேவை செய்வது போன்று செயல்படுகிறார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணனை சாடியிருந்தார்.
அதையடுத்து, நான் மட்டுமல்ல எல்லோருமே பணத்திற்காகத்தான் வேலை செய்கிறோம். நான் பணத்திற்கு வேலை செய்தாலும் அதில் உண்மையான சமூக அக்கறை உள்ளது என்று ஸ்ரீபிரியாவுக்கு பதில் கொடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆக, பஞ்சாயத்து நிகழ்ச்சியினால் மாஜி நடிகைகளிடம் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தீர்க்கவே இன்னொரு பஞ்சாயத்து வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.