ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் வெளியான ‛அம்மா கணக்கு' படத்தின் ஒரிஜினல் படமான ‛நில் பாட்டே சனாட்டா' படத்தை இயக்கியவர் அஸ்வினி திவாரி. இவர் அடுத்தப்படியாக ஆயுஸ்மான் குராணா, ராஜ்குமார் ராவ் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோரை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‛பரேலி கி பார்பி' என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஆயுஸ்மான், பிரிண்ட்டிங் பிரஸ் ஒன்றின் உரிமையாளராகவும், ராஜ்குமார் ராவ், எழுத்தாளர் ரோலிலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பரேலி கி பார்பி படம், 2017-ம் ஆண்டு, ஜூலை 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது.