சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கர்நாடக சங்கீதத்தின் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று காலமானார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், கர்நாடக சங்கீத கலைஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சிவக்குமாரும் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினார். கர்நாடக சங்கீத்தின் பீஷ்மர் பாலமுரளி கிருஷ்ணா என்று சிவக்குமார் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... ‛‛பால முரளி கிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம் அப்படிப்பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள், ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் A.P.நாகராஜனின் வேண்டும்கோளை ஏற்று திருவிளையாடல் படத்தில் டிஎஸ். பாலையாவின் குரலுக்கு ‛‛ஒரு நாள் போதும்மா இன்று ஒரு நாள் போதும்மா...'' என்ற பாடலை பாடினார். அந்தப்படம் வெற்றி படமாக ஓடியதற்கு, அவர் பாடிய பாடலும் முக்கிய காரணமாக அமைந்தது. ஏன்னென்றால் மாறுபட்ட குரல், டிஎஸ்.பாலைய்யா வின் நடிப்பு போன்றவையாகும். அதன்பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் இளையராஜா இசையில் கவிக்குயில் படத்தில் எனக்காக அவர் பாடினார். சிக்மகளூர் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணார் ,ராதா வேடத்தில் நடித்தோம். ‛‛சின்ன கண்ணன் அழைகிறான்...'' என்கிற பாடல்காட்சியில் நடித்தோம், பாலமுரளி கிருஷ்ணா பாடினார். அந்த பாடல் தமிழ்சினிமா ராசிகர்கள் அனைவரும் மறக்க முடியாத பாடல். அந்த மாமனிதர் எனக்காக பாடினார், அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.
இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.