ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் வளர்த்து வரும் இளம் நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். சமீபத்தில் இயக்குநர் அலிஅபாஸ் இயக்கத்தில், வெளியாகி வசூலை குவித்த ‛சுல்தான்', படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்படத்தில் இருந்து அனுஷ்காவிற்கு நிறைய படங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிரபல இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில், வெளிவரயிருக்கும் ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் உடன் முக்கியமான ரோலில் அனுஷ்கா சர்மாவும் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற அனுஷ்கா, தனக்கு பார்த்ததும் வரும் காதலில் நம்பிக்கையில்லை என்றார்.
இதைப்பற்றி அனுஷ்கா மேலும் கூறியதாவது...... "நான் மிகவும் யதார்த்தமான பொண்ணு. கண்டதும் வரும் காதலில் எனக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை. இவ்வகையான காதல் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. என்னை யாரும் காதலிக்கிறார்களா என்று தெரியாது. அவர்களாக வந்து என்னிடம் கூறும் வரை அவர்களை நான் என் நண்பர்களாக தான் பார்ப்பேன் " என்றார்.