ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினியை மாடலாக வைத்து 'கோச்சடையான்' என்ற அனிமேஷன் படத்தை இயக்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்தப் படம் எதிர்பாரர்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே டைரக்ஷன் பக்கம் வராமல் தயாரிப்பு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்குகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
மிகப்பெரிய வெற்றிபெற்ற 'தெறி', 'கபாலி' படங்களை தொடர்ந்து கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் புதிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு உருவாகிறது என்றும், இந்தப்படத்தில் நடிக்கவும், பணியாற்றவும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விளம்பரங்களை செய்திருந்தனர்.
அதன் பிறகு, இந்தப் படத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. இப்போது திடீர் திருப்பமாக இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வட சென்னை படத்தில் நடித்து வரும் தனுஷ் இன்னொரு பக்கம் ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி' என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். 'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.