ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிசாசு படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் அரோல் கரோலி. தற்போது சவரக்கத்தி படத்திற்கு இசை அமைத்துள்ளார். பிசாசு படத்தில் ஒரே பாடல்தான். அதேபோல சவரக்கத்தி படத்திலும் ஒரே பாடல்தான். ஆனால் இரண்டு படங்களும் பின்னணி இசைக்கு முக்கியத்துவமான படங்கள். இதுபற்றி அரோல் கரோலி கூறியதாவது...
சவரக்கத்தி படத்திற்காக இரண்டு பாடல்களை நான் இசையமைத்து இருக்கிறேன். ஒன்று, "தங்கக்கத்தி, இரும்புக்கத்தி...", மற்றொன்று தமிழச்சி தங்கப்பாண்டியனின் வரிகளில் உதயமான "அன்னாந்து பார்...." பாடல். இதில் இரண்டாவது பாடலுக்கு மிக முக்கியமே, காட்சிகள் தான். எனவே நாங்கள் அந்த பாடலை இசை வெளியீட்டு விழாவில் வெளியிடவில்லை. நிச்சயமாக யதார்த்தமான காட்சிகளில் உருவான இந்த "அன்னாந்து பார்...." பாடலை திரைப்படத்தில் பார்க்கும் பொழுது, ஒரு புதுவித அனுபவம் ரசிகர்களின் உள்ளங்களில் ஏற்படும்.
மிஷ்கின் படங்கள் அனைத்தும், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதியக்கூடியதாக இருக்கும். அவரின் ரசனையை நன்கு அறிந்து, அதற்கேற்றார் போல் இசையமைப்பது தான் சவாலான காரியம். ஒரு இசை அமைப்பாளரின் வெற்றிக்கு இயக்குனர்கள் மிகவும் முக்கியம். மிஷ்கின் படங்களின் பாடல்களின் வெற்றிக்கு அதுதான் காரணம். என்கிறார் அரோல் கரோலி.