மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
டிஜிட்டல் கேமரா வந்த பிறகு சினிமாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறது. நேற்று முன்தினம் 10 மணி நேரத்தில் ஒரு படத்தை எடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பு அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்கள். இதற்காக மொத்தம் 6 கேமராக்களை பயன்படுத்தினார்கள். ஒரு காட்சி எடுத்து முடியும்போதே அடுத்த காட்சிக்கான கேமராவும் ஏற்பாடும் தயாராக இருக்கும் இப்படி பத்து மணிநேரத்திற்கும் 50 காட்சிகள் வரை எடுத்தார்கள்.
டாக்டர் சரவணன் (திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க வேட்பாளர்), அனுகிருஷ்ணன், சிங்கம்புலி, குமரேசன், கிரேன் மனோகர், போண்டா மணி உள்பட பலர் நடித்தார்கள். ஜெயக்குமார் தங்கவேலு ஒளிப்பதிவு செய்தார், ராஜா இசை அமைக்கிறார்.