ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பதற்கு முக்கிய காரணம் தனுஷ் மட்டுமே. அவருக்கு தன்னுடைய '3' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து தொடர்ந்து 'எதிர் நீச்சல், காக்கி சட்டை' ஆகிய படங்களில் நாயகனாக நடிக்க வைத்து அவருக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பின் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கோலிவுட்டில் பரபரப்பு செய்தி பரவியது. 'முடிஞ்சா இவன புடி' திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் இருவரும் முகம் கொடுத்து பேசாதது அதை உறுதி செய்தது.
இதனிடையே தனுஷ் நடித்துள்ள 'கொடி' படத்தின் தெலுங்கு இசை வெளியீடும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ' படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழாவும் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இரண்டு விழாக்களுமே ஒரே ஹோட்டலில், ஒரே நேரத்தில் நடந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தனுஷ் பற்றியும் சிவகார்த்திகேயன் பற்றியும் தெலுங்குத் திரையுலகம் வரை நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும் போது இருவரும் ஒரே சமயத்தில் இப்படி தங்களது பட விழாக்களை நடத்தி தங்களுக்குள் இருக்கும் பனிப் போரை தெலுங்குத் திரையுலகம் வரை அழைத்துச் சென்றுவிட்டார்கள் என இங்குள்ளவர்கள் வருத்தப்படுகிறார்கள்.