ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் சிவகுமாருக்கு வருகிற 27ந் தேதி 75வது பிறந்த நாள். 1965ம் ஆண்டு ஏ.சி.திருலோகச்சந்தரின் காக்கும் கரங்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி 100 படங்களுக்கு மேல் நடித்தார். அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கை காரி, வண்டிக்சக்கரம், சிந்து பைரவி, ராமன் பரசுராமன், கந்தன் கருணை என அவர் பெருமை சொல்லும் படங்கள் ஏராளம்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் அவர் நடித்துள்ளார். தற்போது அவரது வாரிசுகள் சூர்யாவும், கார்த்தியும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள்.
சிவகுமாரின் 75வது பிறந்த நாளை அவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து மார்கண்டேயருக்கு வைர விழா என்ற தலைப்பில் பிரமாண்ட விழாவாக கொண்டாட இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக வருகிற 25 மற்றும் 26ந் தேதிகளில் சிவகுமார் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடக்கிறது. பிறந்த நாள் அன்று சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் முன்னணி நடிகர் நடிகைகள், சிவகுமாருடன் பணியாற்றிய நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.