ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மாரி, பாயும்புலி படங்கள் தொடர்ந்து காஜல்அகர்வால், கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நடித்து வரும்போதே, அஜித்தின் 57வது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு, தெலுங்கில் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படமும் கிடைத்தது. அதனால், மறுபடியும் காஜல்அகர்வாலின் மார்க்கெட்டில் பரபரப்பு கூடியது.
இந்நிலையில், இதே வேகத்தில் தான் இன்னும் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்து மேலும் மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி விட வேண்டும் என்று நினைக்கிறார் காஜல்அகர்வால். அதன்காரணமாக, அனுஷ்கா, நயன்தாரா, திரிஷாவைத் தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கும் கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. தனது இந்த ஆசையை சில டைரக்டர்களிடம் வெளிப்படுத்தியுள்ள அவர், தான் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்த சில வேற்று மொழிப்படங்களை டைரக்டர்களின் கவனத்துக்கு கொண்டு வந்து, தன்னாலும் கதையின் நாயகியாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார் காஜல்அகர்வால்.