ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை, பெரிய திரைகளில் நடனம் ஆடி வந்தவர் நடன கலைஞர் சாண்டி. இவரது காமெடி நடனங்கள் புகழ்பெற்றவை. அவர் தற்போது பலசாலி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சண்டிக்குதிரை படத்தில் நடித்த மானஸா ஹீரோயின். வைஸாலி பிக்சர்ஸ் சார்பில் கோவை வெங்கட் தயாரிக்கும் படத்தை சிவகார்த்திக் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே கடலை போட பொண்ணு வேணும், ரீங்காரம் படங்களை இயக்கியவர். ஆனந்தராஜ், சாம்ஸ், லொள்ளுசபா சாமிநாதன்,தினா, நிரோஷா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜே.ஹரீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்சன் இசை அமைக்கிறார். இது முழுநீள நகைச்சுவை சித்திரம் என்கிறார் இயக்குனர் சிவகார்த்திக்.
அவர் மேலும் கூறியதாவது: 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான். இதை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லும் படம். பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதை.
பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவை பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால் பலசாலி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனைவிட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் சண்டைகளாகத் தான் இருக்கும். என்கிறார் சிவகார்த்திக்.