ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாக்., நடிகர் பவாத் கான் நடித்துள்ள, ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படத்தை வெளியிட, முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளதாக, படத்தயாரிப்பாளர் முகேஷ் பட் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர், நடிகையர் அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய், பாக்., நடிகர் பவாத் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ஏ தில் ஹை முஷ்கில். கடந்த மாதம், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் யூரியில் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள், 19 பேர் பலியாகினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, பாக்., நட்சத்திரங்களை, இந்திய திரைப்படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குரல் எழுப்பினார். பாக்., நடிகர்கள் நடித்த, திரைப்படங்களை திரையிடவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், பாக்., நடிகர் பவாத் கான் நடித்துள்ள, ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தை திரையிடும் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என, தாக்கரே எச்சரித்துள்ளார். இதனால், பல தியேட்டர் உரிமையாளர்கள், இந்த படத்தை திரையிட மறுத்து விட்டனர். இந்நிலையில், படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான முகேஷ் பட், நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.
இதன்பின், அவர் கூறியதாவது: எங்கள் நிலை குறித்து உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். அனைத்து மாநில அரசுகளுடனும் பேசுவதாக, அவர் உறுதியளித்துள்ளார். ஏ தில் ஹை முஷ்கில் படத்தை, திரையிடும் அனைத்து தியேட்டர்களுக்கும், 100 சதவீத போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அவர் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.